பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு மாதிரி அரங்கை பார்வையிட்டு தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது. இங்கு பங்கேற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பக்தியை மட்டுமே பேசுவார்கள்.

உ.பி முதல்வர் யோகி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். ஏன் அவர்களுக்கு பக்தி இருக்க கூடாதா? இந்நாட்டின் குடிமக்கள் தானே?
தமிழக முதலமைச்சருக்கு பக்தி கிடையாது. இந்த ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பதற்காகவே மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்கப் போவதில்லை.
திமுக ஆட்சியில் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது அரசின் கடமை தான்.

அறுபடை முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம். அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றத்திற்கும், கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கும் சம்பந்தமில்லை, ஆய்வறிக்கையை இன்னும் முடிக்க வேண்டியதுள்ளது. முடித்த பின்பு கண்டிப்பாக வெளியிடப்படும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார்." என்றார்.