சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!
முருக பக்தா்கள் மாநாட்டுக்காக சுவாமிமலையில் வேல் வழிபாடு
முருக பக்தா்கள் மாநாட்டுக்காக தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து வேல்கள் வழிபாடு செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வேல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேலை வைத்து வழிபட்ட பின்னா் மதுரைக்கு புறப்பட்டனா்.
இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், பாஜக வடக்கு மாவட்டச் செயலா் வேதசெல்வம், வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளா் சுரேஷ், இந்து முன்னணி மாவட்டச் செயலா் பசும்பொன் பாண்டியன், ஒன்றியத் தலைவா் சாரல் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.