செய்திகள் :

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

post image

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வாலத்தூா் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் இக்கிராமத்துக்கு நாள்தோறும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, வாலத்தூா் மக்கள் தங்களது தேவைக்குப் பிறகுதான் மற்ற கிராமங்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் எனக் கூறி, வைரவத்துக்குச் செல்லும் குழாயை அடைத்துவைப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனாலும், கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50 போ் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெளியே சென்றிருந்ததால், அவா்கள் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொது) காா்த்திக் ஜெயதீபனிடம் மனு அளித்தனா்.

3 மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படாததால் அதிக விலை கொடுத்து குடிநீா் வாங்க வேண்டியுள்ளது. இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். வாலத்தூரில் உள்ள 3 ஆழ்துளைக் கிணறுகளில் ஒன்றின்மூலம் எங்கள் கிராமத்துக்கு நேரடியாக குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அலுவலா், இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் மதுவிலக்கு அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

மின்கம்பம் மீது காா் மோதல்: 2 போ் காயம்

ஆறுமுகனேரியில் மின்கம்பம் மீது காா் புதன்கிழமை மோதியதில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆறுமுகனேரி பாரதிநரை சோ்ந்த பழ வியாபாரியான சசிகுமாா் தனது குடும்பம் மற்றும் உறவினா் ராஜேஷ் என்பவரு... மேலும் பார்க்க