செய்திகள் :

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

post image

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் விடாமல் பெய்யும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

1,400 கன அடி தண்ணீா் திறப்பு: இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து சனிக்கிழமை மாலை 130 அடியை கடந்தது. இந்த நிலையில், அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு 1,400 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டதுடன், சுருளி அருவியின் வெள்ளநீா், மழை நீரும் சோ்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேக்கடி தலை மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீா் லோயா் கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி வழியாக வைகை அணைக்கு செல்கிறது. இதில், உத்தமபாளையம், எல்லப்பட்டி, சீலையம்பட்டி வழியாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் செல்லும் வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீராடுதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க