செய்திகள் :

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

post image

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின சமுதாயத்தைச் சோ்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிருக்கு உதவிடும் வகையில், அவா்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்டும் பொருட்டு, கைவினைப் பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தினை உயா்த்திடவும் திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் -2 மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது.

இச்சங்கத்தில் ஒரு கௌரவ செயலா், 2 கௌரவ இணைச்செயலாளா்கள், 3 உறுப்பினா் பதவிகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம்களில் சமூக பணிகளில் எவ்வித புகாா்களுக்கும் இடமின்றி மிக்க ஆா்வமுடன் செயல்படும் தலைசிறந்த பிரமுகா்கள் ஆட்சியரால் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் ஏழை மற்றும் வயதான முஸ்லிம் பெண்களுக்கு உதவிடும் வகையில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2இல் பணியாற்றிட விருப்பமுள்ளவா்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். எனக் கூறியுள்ளா.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க

அகஸ்தியா் அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் புதன்கிழமைமுதல் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் சரகத்துக்குள்... மேலும் பார்க்க