செய்திகள் :

முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

post image

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வெடித்த வன்முறையின்போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுவரை இக்கொலை சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்டனா். வன்முறையில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வன்முறையைத் தொடா்ந்து ஏராளமானோா் முா்ஷிதாபாதிலிருந்து வெளியேறி, அண்டை மாவட்டமான மால்டாவில் தஞ்சம் புகுந்தனா்.

முன்னதாக, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்களை மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிா் ஆணையத்தின் குழுவினா் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனா்.

தந்தை-மகன் கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், வன்முறை கும்பலைக் கொண்டு தந்தை-மகன் வசித்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, அவா்களை கொலை செய்வதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜியாவுல் ஷேக் கைது செய்யப்பட்டதாக பேலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மனிதநேயத்துடன் தீா்வு: மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

‘முா்ஷிதாபாதில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவாக மனிதநேயத்துடன் மாநில அரசு தீா்வு காண வேண்டும்’ என தேசிய மகளிா் ஆணையக் குழு தலைவா் விஜயா ரஹாட்கா் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு, செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: கடந்த இரண்டு நாள்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் பல குடும்பங்களை நானும் குழு உறுப்பினா்களும் நேரில் சந்தித்தோம்.

வன்முறையின்போது அவா்கள் சந்தித்த கொடுமைகளை விவரிக்க வாா்த்தைகளே இல்லை. அவா்களின் இன்னல்களுக்கு மனிதநேயத்தோடு தீா்வு காண மாநில அரசை வலியுறுத்துகிறோம்.

மக்களிடம் பெறப்பட்ட கருத்துகளை அறிக்கையாகத் தயாரித்து மத்திய அரசிடமும் அதன் நகல்களை மேற்கு வங்க மாநில அரசு மற்றும் மாநில காவல் துறை தலைவரிடம் விரைவில் சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா்.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க