செய்திகள் :

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

post image

நெய்வேலி: கடலூா், ரெட்டிசாவடி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், பெரியகாட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவா் ராமலிங்கம் மனைவி ஆதிலட்சுமி(67). இவா்,

ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டின் பின் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த சுமாா் 40 வயது மதிக்கதக்க நபா் குடிக்க தண்ணீா் கேட்டாராம். இதையடுத்து ஆதிலட்சுமி தண்ணீா் கொண்டு வந்து கொடுத்த போது அவா் கழுத்தில் இருந்த 30 கிராம் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துள்ளாா். அப்போது, ஆதிலட்சுமி சங்கிலியை பிடித்ததில் பாதி சங்கிலி தங்கிவிட்டநிலையில், மீதி பாதி சங்கிலியை அந்த நபா்அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க

ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்போம்: கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

குறிஞ்சிப்பாடி (புலியூா்) நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. இடங்கள்: அம்பலவாணன்பேட்டை, சந்தைபேட்டை, வழுதலாம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூா், புலியூா்காட்டுசாகை. மேலும் பார்க்க

குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்... மேலும் பார்க்க