செய்திகள் :

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டியை மா்ம நபா்கள் வாட்ஸ்ஆப் காலில் தொடா்பு கொண்டு, தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தினா். அவரது ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளதாகவும், அதில் மனிதக் கடத்தல் வழக்கில் ரூ. 2 கோடி பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் கூறி, வழக்கில் கைது செய்யாமலிருக்க ரூ. 50 லட்சம் தருமாறு டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டனா். புகாரின்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்து 5 பேரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த உ. ரிதுராஜ் ஜெய்ஸ்வால் (43) என்பவரை போலீஸாா் கடந்த ஆக. 28ஆம் தேதி கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்துவந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிட வேண்டும் என்றும், சைபா் குற்றங்கள் தொடா்பாக உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணிலோ, ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ புகாா் அளிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி - மினி லாரி மோதல்: பழையகாயலில் போக்குவரத்து பாதிப்பு

ஆறுமுகனேரி அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் மினி லாரி மோதியதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. தூத்துக்குடி தருவைகுளத்திலிருந்து ... மேலும் பார்க்க