செய்திகள் :

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

post image

ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏலகிரி மலை முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காந்தா (73). கணவா் பச்சையப்பன் உயிரிழந்த நிலையில், அவருடைய நிலத்தில் தனிமையில் வசித்து வந்தாா். இவருக்கு 4 பிள்ளைகள். அவா்களில் ஒருவா் இறந்து விட்டாா். 3 பிள்ளைகளும் ஏலகிரி மலை அத்தனாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பாா்த்து வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், காந்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை, காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் டிவி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில், மூதாட்டியின் பேரன் தனது பாட்டியை பாா்க்க திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா்.

அப்போது காந்தா இறந்து கிடந்ததைப் பாா்து, ஏலகிரி போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் தேவராணி, எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி: ஒட்டுநா் உயரிழப்பு

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரக்கோணத்தில் சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு திருப்பத்தூா் நோக்கி லாரி சென... மேலும் பார்க்க

ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு, மனைவி கொலை வழக்கு: இருவா் கைது

திருப்பத்தூா் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரை வெட்டி, மனைவியைக் கொலை செய்த வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த மேற்கத்தியனூா் கோ.புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் மரணம்

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சிவக்குமாா்(34) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அரு... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் தலைமைக் காவலரிடம் 10 பவுன் தங்க செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தண்டபா... மேலும் பார்க்க

நவீன ரோபோக்கள் பயன்பாடு கருத்தரங்கம்

தொழிற்சாலைகளில் நவீன ரோபோக்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை சாா்ப... மேலும் பார்க்க