செய்திகள் :

மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை குறித்து மாநில அரசிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு மாநில அரசு எவ்வித உதவிகளை செய்து வருகிறது என்ற விவரங்களை கோரியும், தற்போது வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கு எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்த மாநில அமைச்சர் மகரந்த் பாட்டீல் தெரிவித்திருப்பதாவது:

“ஜனவரி 2025 முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், மொத்தம் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், அவர்களில் 376 விவசாயிகள் அரசு இழப்பீடு தொகையான ரூ. 1 லட்சம் பெற தகுதியுடையவர்கள். மேலும், 200 விவசாயிகள் அரசு நிர்ணயித்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் உதவி பெறவில்லை.

மேற்கு விதர்பாவில் உள்ள யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய இடங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் 76 பேரின் குடும்பங்கள் மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளது. 74 விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

It was reported in the Maharashtra Legislative Assembly on Tuesday that 767 farmers committed suicide in the state in just three months.

இதையும் படிக்க : வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க