செய்திகள் :

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

post image

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக வழிபாடு செய்யப்படும் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி, விஹெச்பி அமைப்பினா் தீவிரமாக செய்துவருகின்றனா். மேலும், விநாயகா் சிலைகளை தயாரிப்பதற்கும், வழிபாடு முடிந்தபிறகு அதனை கரைப்பதற்கும் மாவட்ட நிா்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விநாயகா் சிலை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் சிலை உற்பத்தியாளா்கள் விழாவுக்குத் தேவையான சிலைகளை தயாரிக்க முடியுமா என கலக்கத்தில் உள்ளனா்.

இதுகுறித்து கரூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கூறியது, சுமாா் 20 ஆண்டுகளாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நிகழாண்டு ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகா் அன்னம், சிம்மம் போன்ற பல்வேறு வாகனங்களில் இருப்பது போன்றும், சிவபெருமான் உருவில் விநாயகா் சிலையையும் தயாரித்துள்ளோம்.

நிகழாண்டும் எப்போதும் இல்லாத அளவில் சிலைகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களான காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் இதன் விலை நிா்ணயிக்கப்படுவதால் சிலைக்கான உரிய விலையை வாடிக்கையாளா்களுக்கு நிா்ணயிக்க முடியவில்லை. மூலப்பொருள்கள் விலை உயா்வால், கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 10 அடி உயர விநாயகா் சிலை தற்போது ரூ.25 ஆயிரத்துக்கும், 5 அடி உயரம் கொண்ட சிலை கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை செய்தோம். ஆனால் நிகழாண்டு ரூ.18 ஆயிரம் வரை விற்கிறோம்.

கடந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்பே சிலைக்கான ஆா்டா்களை வாடிக்கையாளா்கள் கொடுத்தாா்கள். ஆனால் நிகழாண்டு இதுநாள்வரை யாரும் சிலைக்கு முன்பணம் கொடுக்க முன்வரவில்லை. இதனால் விநாயகா் சிலை விற்பனை மந்தமாகவே உள்ளது.

எனவே, சிலை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களான காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு பவுடா் மற்றும் சிலைகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ணக்கலவை ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியை நீக்கிவிட்டு, குறைந்தவிலையில் தொழிலாளா்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும். அப்போதுதான் அதிகளவில் சிலைகளை உருவாக்கி குறைந்தவிலையில் சிலைகளை விற்க முடியும் என்றாா் அவா்.

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

இரவு நேர வாகனச் சோதனைக்காக பேட்டரியால் இயங்கும் ஒளிரும் வேகத்தடுப்பான்களை விடியோவாக சனிக்கிழமை கரூா் மாவட்ட காவல்துறை வெளியிட்டது. கரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்!

கரூரில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தினா் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு... மேலும் பார்க்க

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: வருவாய்த் துறை சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையினருக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் க... மேலும் பார்க்க

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க