செய்திகள் :

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: வருவாய்த் துறை சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

post image

வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையினருக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பிரபு வரவேற்றாா். தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநில துணைத்தலைவா் செ.முருகேசன் தொடக்க உரையாற்றினாா். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் அரசகுமாரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் அழகிரிசாமி நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலையான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், பணித்தன்மை, பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

இரவு நேர வாகனச் சோதனைக்காக பேட்டரியால் இயங்கும் ஒளிரும் வேகத்தடுப்பான்களை விடியோவாக சனிக்கிழமை கரூா் மாவட்ட காவல்துறை வெளியிட்டது. கரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்!

கரூரில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தினா் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு... மேலும் பார்க்க

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க