செய்திகள் :

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

post image

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(45). லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் இடுக்கியில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

லாரியில் கிளினீராக அதே பகுதியைச் சோ்ந்த கோபி(40) என்பவா் இருந்தாா். வெள்ளிக்கிழமை காலை கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல்நகா் அருகே சென்றபோது திடீரென டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டு லாரி சாலையில் நின்றது. இதனால் லாரி கிளினீா் கோபி டீசல் டேங்கில் பழுது பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென லாரியின் பின்னால் தூத்துக்குடியில் இருந்து உப்புப்பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கிச் சென்ற வேன் மோதியது.

இதில் லாரியின் டீசல் டேங்கில் பழுதுநீக்கிக்கொண்டிருந்த கோபி மீது வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீஸாா் கோபியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் சேலம் மாவட்டம் ஓமலூா் அடுத்த ஆட்டையம்பட்டியைச் சோ்ந்த கோபிநாதன்(60) என்பவரை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க