செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடலுறுப்புகள் தானம்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரியில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

புவனகிரியைச் சோ்ந்தவா் தமிழ்ஒளி, பல் மருத்துவா். இவரது மகன் சரண் (20), புதுச்சேரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தாா். இவா் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, சரணை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, சரணின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான புவனகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொ) சந்திரசேகரன், புவனகிரி வட்டாட்சியா் கணபதி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க