செய்திகள் :

`மெக்டொனால்டில் பாத்திரம் கழுவி முதல் சம்பளம் வாங்கினேன்' - பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்மிருதி இரானி

post image

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிவியில் நடிக்க வந்திருக்கிறார். அவர் தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹு தி சீசன் 2ல் நடித்து வருகிறார். அவர் ராகுல் காந்தியை எதிர்த்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் நடிகை சோஹா அலிகானுடன் நடந்த நேர்காணலில், தனது பழைய வாழ்க்கை குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில்,''நான் பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டபோது அதற்கு தேவையான பணத்தை எனது தந்தை கொடுத்தார். அவர் பணம் கொடுக்கும்போது அப்பணத்தை திரும்ப கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் கொடுத்தார்.

அந்த பணத்தை திரும்ப கொடுக்க எனது தந்தை ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுத்தார். எனவே அந்த கடனை அடைக்க நான் மெக்டொனால்டில் வேலைக்கு சேர்ந்தேன். முதலில் ஜெட் ஏர்வேஸில் விமான பணிப்பெண் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்.

ஆனால் அந்த வேலைக்கு போதுமான பெர்சனால்டி இல்லை என்று என்னை நிராகரித்துவிட்டார்கள். எனவே மெக்டொனால்டில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு சென்றேன். நேர்முகத்தேர்வின் இறுதிச்சுற்றில் நான் இருந்தபோது என்ன வேலை என்று கேட்டேன். தரையை துடைத்து பாத்திரங்களை கழுவவேண்டும் என்று சொன்னார்கள். சம்பளம் எவ்வளவு என்று கேட்டபோது மாதம் ரூ.1500 கொடுப்பதாக சொன்னார்கள். இடைவேளையின் போது ஒரு பர்கர் சாப்பிட கொடுப்பதாக சொன்னார்கள்'' என்றார்.

ஸ்மிரிதி இரானி டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருந்தபோது நிலேஷ் மிஸ்ரா என்ற பத்திரிகையாளருடன் நடந்த பேட்டியில், தனது ஒரு நாள் சம்பளம் ரூ.1800 என்று குறிப்பிட்டு இருந்தார். ``எனது மேக்கப் கலைஞர் காரில் வருவார். ஆனால் நான் ஆட்டோவில் செல்வேன். அதன் பிறகு டிவி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்தேன்''என்று குறிப்பிட்டு இருந்தார். இப்போது ஒரு எபிசோட்டிற்கு ஸ்மிருதி இரானி ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார். செய்திச்சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்பதை ஸ்மிருதி இரானி ஒப்புக்கொண்டார். ஆனால் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?

சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம்.ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கர... மேலும் பார்க்க

`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்சய் தத்!

மும்பையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட்ஸ் மும்பையில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உப தொழிலாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர். இதில் ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், இய... மேலும் பார்க்க

`இரவு 7 முதல் காலை 6 வரை வேலை செய்யலாம்..'- பெண்கள் நைட்ஷிஃப்ட் பணியாற்ற குஜராத்தில் சட்டத்திருத்தம்

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்

சஞ்சய் கபூர் விவாகரத்துடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் ... மேலும் பார்க்க

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்க... மேலும் பார்க்க