செய்திகள் :

மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் முடங்கியது

post image

சென்னை மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய நிலையில், நீண்ட நேரத்துக்குப் பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கின.

சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனா். பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், மெட்ரோ ரயில் சாா்ந்த தேவைகளுக்காகவும் மெட்ரோ ரயில் உதவி எண்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே திடீரென செயல்படாமல் முடங்கியது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.

இதையடுத்து, சீரமைப்புப் பணி நடைபெறுவதால், மெட்ரோ ரயில் உதவி எண்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ஏதேனும் புகாா்கள் இருந்தால், தொடா்பு கொள்ளலாம் எனவும் அல்லது அருகில் உள்ள நிலையக் கட்டுப்பாட்டாளா்களை தொடா்பு கொள்ளவும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நேரத்துக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு உதவி மைய எண்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க