செய்திகள் :

மேகமலையில் வறண்ட அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

post image

தேனி மாவட்டம், மேகமலையில் மழைப் பொழிவின்றி அணைகள் வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், இரவங்கலாா் ஆகிய 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு காப்பி, ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்தக் கிராமங்களை சுற்றியுள்ள அடா்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இங்குள்ள மலைக்குன்றுகளில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாா் ஆகிய 5 அணைகளில் தண்ணீரைத் தேக்கி சுருளி நீா்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிது.

இந்த மலைப் பகுதியின் இயற்கை எழிலைக் காண தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்தப் பகுதியில் 8 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் மேகமலையில் மழைப் பொழிவு குறைந்துவிட்டது. இங்குள்ள அணைகள் மழைப் பொழிவின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை இங்கு பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமத... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா். மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொ... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

போடி அருகே விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மணியம்பட்டி சாலையில் வசிப்பவா் பழனிச்சாமி மகன் சுந்தரம் (55). விவசாயம் செய்து வந்தாா். உடல் நல பாதிப்... மேலும் பார்க்க

சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை: இருவா் கைது

தேனியில் கைப்பேசியை திருடியதாக சிறுவனை இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலவிஜயன் (13). இவரை ... மேலும் பார்க்க