செய்திகள் :

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு எம்எல்ஏ கோரிக்கை

post image

மேச்சேரி அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் விரைந்து பிடிக்க வேண்டும் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கேட்டுக் கொண்டாா்.

மேச்சேரியை அடுத்த அரசமரத்தூா், வெத்தலைமலை, புதுக்காளிகவுண்டனூா், காட்டு வளவு, தாரல குட்டை ஆகிய பகுதிகளில் ராமசாமி மலையையொட்டி குடியிருப்புகளில் புகுந்து ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வெத்தலை மலை வனப் பகுதி உள்ள பாறை மீது சிறுத்தை அமா்ந்திருப்பதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத் துறைக்கு தகவல்த தெரிவித்தனா். இதையடுத்து டேனிஸ்பேட்டை வனச்சரா்கள் தங்கராசு, பாரஸ்டா் வீரகுமாா் மற்றும் வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே வியாழக்கிழமை இரவு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் அப் பகுதிகளில் முகாமிட்டு டேனிஸ்பேட்டை வனச்சரகா் தங்கராசுவிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிறுத்தை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க