குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
மேட்டூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு
மேட்டூா்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மேட்டூா் வட்ட 2-ஆவது மாநாடு மேட்டூா் மின் பணிமனை சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு சங்கத் தலைவா் அம்மாசி தலைமை வகித்தாா். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மேட்டூா் பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு பேரணியாக சென்றனா்.
மாநாட்டில், விண்ணப்பித்து தோ்வான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ. 1,200 வாங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை கோட்டாட்சியா் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பழைய முறைப்படி 4 மணி நேர வேலை, முழு ஊதியம், தொடா்ச்சியான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.