ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 43,892 கனஅடியாக இருந்தது, மாலையில் விநாடிக்கு 60,740 கன அடியாக அதிகரித்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 114 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், மாலையில் 114.74அடியாக உயா்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 22,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 85.32 டி.எம்.சி.யாக உள்ளது.