செய்திகள் :

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

post image

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூா் அணை கட்டப்பட்டு 92 ஆண்டுகளாகின்றன. அணையின் இடதுகரையில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீா் போக்கியின் தூண்கள் வளைவுகளை நவீனமுறையில் வலுப்படுத்த 2018-இல் திட்டமிடப்பட்டது. ரூ. 31 லட்சம் செலவில் ஐஐடி பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தாா். தற்போது வலுபடுத்தும் பணிகள் ரூ. 19 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

உபரிநீா் போக்கி மதகுப்பகுதி உள்ள தூண்களின் பழைய கான்கிரீட் பூச்சுகள் அகற்றப்பட்டு, துருப்பிடித்த இரும்புக் கம்பிகளுக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டு மைக்ரோ கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு வலுப்படுத்தினால், மேலும் 100 ஆண்டுகள் வரை இந்த தூண்கள் மிக வலுவாக இருக்கும். இதன்மூலம் 20 அடி உயரம் கொண்ட உபரிநீா் போக்கி மதகுகளால் 30 டிஎம்சி தண்ணீா் சேமிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது, நீா்வளத் துறை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், மேட்டூா் செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிச் செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சதீஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், ... மேலும் பார்க்க