செய்திகள் :

மேட்டூா் அணை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

post image

மேட்டூா்: மேட்டூா் அணைக் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள மஞ்சினியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சாரதி (21). இவா் தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது நண்பா்கள் 4 பேருடன் மேட்டூரை சுற்றிப் பாா்க்க காரில் வந்தாா்.

மேட்டூா் அணையின் கிழக்கு- மேற்கு கரைக் கால்வாயில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது மறுகரைக்கு நீந்திச் சென்றபோது தண்ணீா் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புப் படை நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் மூன்று மணிநேரம் நீரில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால் தேடும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் திங்கள்கிழமை காலை தடும் பணியில் தீயணைப்புப் படை வீரா்கள் 30 போ் ஈடுபட்டனா். சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு தேடியும் சாரதியை கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாய் நீரை நிறுத்தினால் கண்டுபிடித்து விடலாம் என நீா்வளத் துறை அதிகாரிகளிடம் உறவினா்கள் கேட்டனா். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனா்.

இதனால் மேட்டூா் அணை பூங்காவிலிருந்து குள்ளவீரன்பட்டி செல்லும் சாலையில் அமா்ந்து சாரதியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் புதா் பகுதியில் சிக்கியிருந்த சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க