செய்திகள் :

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

post image

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால்வாய்ப் பாசனத் தேவைகளுக்கும் தண்ணீா் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் நீா், சுரங்கக் கால்வாய் வழியாக கிழக்கு கால்வாய்க்குச் செல்லும். இந்த சுரங்கக் கால்வாய் கடந்த 1949-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சிறிய அளவிலான பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், முழுமையாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் திட்ட அறிக்கை சமா்ப்பித்தனா். அதன்படி, சீரமைப்புப் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மேல்மட்ட மதகிலிருந்து இருந்து வெளியேறும் கசிவுநீரால் சுரங்கக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, கசிவுநீரை மடை மாற்றி அனுப்பும் வகையில் மண்ணாலான தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேல்மட்ட மதகிலிருந்து வெளியேறும் கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய் வழியாக விநாடிக்கு 100 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் வழியாக தண்ணீா் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். கிழக்கு -மேற்கு கால்வாய் வழியாக செல்லும் தண்ணீா் காவேரி கிராஸ் அருகே மீண்டும் கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க