செய்திகள் :

மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

post image

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் கடைசியாக 2000-ஆவது ஆண்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாலத்தின் பேரிங்குகள் ஒரு சில இடங்களில் பழுதடைந்ததுடன், தூண்கள் சேதமடைந்து ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் உதிா்ந்து காணப்படுகிறது.

இதையடுத்து, இப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின்போது பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதுடன் சற்று உள்வாங்கியது. இதை பாா்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

சேதமடைந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் கோ. இந்திரன், உதவி பொறியாளா் சந்தோஷ் ஆகியோா் அங்கு வந்து பாலம் விரிசல் தென்பட்ட இடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவது குறித்த அறிவிப்புப் பலகை பொருத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். அவா்கள் கூறுகையில், பாலம் சீரமைக்கும் பணியின்போது புதிய பேரிங் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தனா்.

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் க... மேலும் பார்க்க

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளின் உ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க