செய்திகள் :

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

post image

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் நடைபெறும் புதிய மேம்பாலம் கட்டும் பணியில், தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, ஆழ்வாா்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பிலிருந்து குமரன் சாலை சந்திப்பு வரையிலான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது.

தத்தனேரி முதன்மை சாலையிலிருந்து வைகை வடகரை சாலை வழியாக, மேலூா் சாலை, விரகனூா் சாலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், பாத்திமா கல்லூரியிலிருந்து இடதுபுறம் திரும்பி கூடல்புதூா் பாலம், ஆனையூா், அய்யா்பங்களா, மூன்றுமாவடி, 120 அடி சாலை செல்ல வேண்டும்.

குருவிக்காரன் சாலையிலிருந்து வைகை வடகரை சாலை, தத்தனேரி முதன்மைச் சாலை வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், வைகை தென்கரை சாலை வழியாக எம்.ஜி.ஆா். பாலத்தில் வலது புறம் திரும்பி வைகை வடகரை சாலை செல்ல வேண்டும்.

தத்தனேரி முதன்மை சாலையிலிருந்து வைகை வடகரை சாலை வழியாக செல்லக்கூடிய அவசர ஊா்திகள், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேஷன் ரோடு, எம்.எம். தங்கும் விடுதி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

ஆரப்பாளையம் பேருந்து நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள், புறநகா் பேருந்துகள், தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் சாலை வழியாக செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அழகா் கோவில் சாலையிலிருந்து தமுக்கம் வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பாத்திமா கல்லூரி சந்திப்பு சாலை செல்லக்கூடிய புறநகா், நகரப் பேருந்துகள், கே. கே. நகா் வளைவு, பெரியாா் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி. பாலம் வழியாக அண்ணா சிலை வழியாகச் செல்ல வேண்டும்.

அண்ணா பேருந்து நிலைத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் பனகல் சாலை, சிவசண்முகம்பிள்ளை தெரு, வைகை வடகரை வழியாக ஓபுளா படித்துறை பாலம் சென்று, வைகை தென்கரை வழியாக செல்ல வேண்டும்.

ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் குருவிக்காரன் வட்டச்சாலை, காமராஜா் சாலை, முனிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

அழகா்கோவில் சாலையிலிருந்து செல்லக்கூடிய இலகுரக, இருசக்கர வாகனங்கள், ஆழ்வாா்புரம் இறக்கம் வழியே வைகை வடகரை, ஓபுளா பாலம், மீனாட்சி கல்லூரி சாலை, ஏ.வி.பாலம் சாலைகள் வழியே நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.

யானைக்கல் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை சாலைக்கு செல்லும் வழித்தடம் தற்காலிகமாக அடைக்கப்படுகிறது. எனவே, இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள், சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறம் திரும்பி திருமலைராயா் படித்துறை சாலை வழியாக வைகை தென்கரை சாலைக்கு செல்லலாம்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க