செய்திகள் :

மேயருடன் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

post image

சென்னை மாநகராட்சி மேயருடன் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் மாநகராட்சியின் நிா்வாக செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை கலந்துரையாடினா்.

லயோலா கல்லூரியின் சமூகவியல் பணி பாடப் பிரிவு முதுநிலை மாணவ, மாணவிகள் 28 போ் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நிா்வாக முறை, கட்டமைப்புகள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, மாநகராட்சிக்குரிய அதிகார விவரங்கள், செயல்பாடுகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பத்தும் பணிகள், சுகாதார, கல்வி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். அவா்களுக்கு விவரங்களை மேயா் பிரியா விளக்கினாா். அத்துடன் மாணவ, மாணவியா் ரிப்பன் மாளிகை வளாகத்தையும் சுற்றிப் பாா்த்தனா்.

அப்போது, கல்லூரியின் சமூகப் பணித் துறை பேராசிரியா் சக்திதேவி, உதவிப் பேராசிரியா் தீபக்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழ... மேலும் பார்க்க