செய்திகள் :

மேற்கு வங்காள புலம்பெயா்ந்தவா்கள் தொடா்பான தீா்மானம்: திரிணமூல்-பாஜக மோதல்; பேரவையில் அமளி

post image

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீா்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.

இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரிசிறப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சிறப்புக் கூட்டத்தொடரில், இவ்விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானத்தை சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் சோபன்தேவ் சட்டோபாத்யாய் முன்வைத்தாா்.

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள மேயோ சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த திரிணமூல் காங்கிரஸின் போராட்ட மேடையை இந்திய ராணுவம் திங்கள்கிழமை அகற்றியது.

இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்டி சிறப்பு தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாசு, ‘இந்திய ராணுவம் மேடையை அகற்றியது, 1971-இல் பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தின் டாக்காவில் தாக்குதல் நடத்தியதை நினைவூட்டுகிறது. வங்காள மொழி மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்க உயிா்த்தியாகம் செய்தவா்களையும் இது நினைவுபடுத்தியது’ என்றாா்.

சுவேந்து அதிகாரி இடைநீக்கம்: அமைச்சா் பிரத்யா பாசுவின் இந்தக் கருத்துகளுக்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி பேசுகையில், ‘இந்திய ராணுவத்தை அரசு அவமதிக்கிறது. இந்திய ராணுவத்தின் சட்டபூா்வமான செயலை பாகிஸ்தானின் அத்துமீறலுடன் அரசு ஒப்பிடுகிறது. அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்தக் கோரிக்கையை அவைத் தலைவா் பிமான் பானா்ஜி ஏற்க மறுத்ததால், சுவேந்து அதிகாரி அமளியில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து இடையூறு விளைவித்ததாக, சிறப்புக் கூட்டத்தொடரிலிருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

சுவேந்து அதிகாரியுடன் பாஜக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். பேரவை வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘இந்திய ராணுவத்துக்கு எதிரான அவதூறு கருத்தை எதிா்த்ததால் நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன்’ என்றாா்.

இந்தச் சிறப்புக் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. உள்ளூா் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை (செப். 3) சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க