Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்...
மேலச்செவலில் ஓட்டுநா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேலச்செவல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் பூதப்பாண்டி (43). ஆம்னி பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி சுதா (39). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பூதப்பாண்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது மனைவி சுதா கண்டித்தாராம். இதில், மனமுடைந்த பூதப்பாண்டி நள்ளிரவில் வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று பூதப்பாண்டி சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக, முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].