செய்திகள் :

மேலும் 3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

post image

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக 4வது கட்டமாக, மேலும் 3 ஆண் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா். கடந்த 2023ஆம் அண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது இந்த மூன்று பேரும் கடத்தப்பட்டனர்.

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

இதைத்தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 183 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் தரப்பும் சனிக்கிழமை விடுவித்தது.

இவர்கள் அனைவரும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான 15 மாத காலப் போரை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டு, அது 19-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைன் மீது ரஷிய நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.அம... மேலும் பார்க்க

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராள... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இது... மேலும் பார்க்க

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற ... மேலும் பார்க்க

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக... மேலும் பார்க்க