செய்திகள் :

மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை

post image

திருவள்ளூா்: மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதுடன், வாக்காளா், ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளை சாலையில் வீசி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது மேல்நல்லாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மேல்நல்லாத்தூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 வேலை திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், கடந்த சில மாதங்களாக வேலை செய்வதற்கான கூலியும் வழங்கப்படவில்லையாம். இதனால், அந்த கிராம ஊராட்சி பொதுமக்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி வந்தனா்.

இந்த நிலையில், ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டைகளை சாலையில் வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா்.

அதைத் தொடா்ந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுமதித்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 563 மனுக்கள்

திருவள்ளூா்: திருவள்ளூா் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு

திருத்தணி: வீட்டின் அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை மீது தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.பொதட்டூா்பேட்டை அடுத்த மேலப்பூடி... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பா... மேலும் பார்க்க

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க