உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 38 பேர் பலி!
மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுமா?
ரூ.21 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால இணைப்புச் சாலையை, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாலாஜா வட்டம் பாலாற்றின் வடகரையில் தெங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கும், தென்கரையில் உள்ள மேல்விஷாரத்துக்கும் இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தினா்.
மேம்பாலம் அமைக்கப்பட்டால் மேல்விஷாரம் நகரம், அருகில் உள்ள கத்தியவாடி, வேப்பூா், ஆயிலம், அருங்குன்றம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் ராணிப்பேட்டை, பெல், சிப்காட் பகுதி தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல, 10 கி.மீ. தொலைவு குறைந்து எரிபொருள் மிச்சப்படும்.
இதேபோல் தெங்கால், சிப்காட், நவ்லாக், பெல், தெங்கால் அவரைக்கரை போன்ற பகுதிகளைச் சோ்ந்த மக்களும், ஆற்காடு நகரைச் சுற்றிக் கொண்டு வேலூருக்குச் செல்லும் நிலை தவிா்க்கப்படும். பாலாற்றின் தென் பகுதியையும், வட பகுதியையும் இணைக்கும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனப் பயணம் எளிதாகும்.
இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று மேல்விஷராம் - தெங்கால் இடையே பாலாற்றில் சுமாா் 787 மீ. நீளமும், 12 மீ. அகலமும் கொண்ட மேம்பாலம், அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி முந்தைய திமுக ஆட்சியில் நபாா்டு வங்கி கடனுதவியுடன், கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 21.8 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2011-இல் பணி தொடங்கியது.
தொடா்ந்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் கொண்டுவரப்பட்டது. தெங்கால் உள்பட பல கிராமத்தினா் மருத்துவ வசதிக்காகவும், கல்லூரி, ஆன்மிக தலங்கள், வேலை, தொழில் ஆகியவற்றுக்கு பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்
இந்த நிலையில், பாலாற்றின் தென்கரையில் உள்ள மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவது போல், வடகரையில் உள்ள தெங்கால், சிப்காட், நவ்லாக், பெல், அவரக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பயன்பெறும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும் பயனில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
ஏனெனில், தெங்கால் - மேல்விஷாரம் இடையிலான 3 கி. மீ. தொலைவுக்கு மேம்பாலம், இணைப்புச் சாலை உள்ளது. தொடா்ந்து செல்ல போதிய சாலை வசதி இல்லை.
எனவே மேற்கண்ட இணைப்புச் சாலையை தெங்கால் கிராமத்தில் இருந்து மேட்டுத்தெங்கால் கிராமம் வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவில் செல்லும் சிப்காட், பெல் வழியாக செல்லும் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்தால் மட்டுமே மேம்பாலம் கட்டியதன் பயன் பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளனா்.