செய்திகள் :

மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுமா?

post image

ரூ.21 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால இணைப்புச் சாலையை, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாலாஜா வட்டம் பாலாற்றின் வடகரையில் தெங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கும், தென்கரையில் உள்ள மேல்விஷாரத்துக்கும் இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தினா்.

மேம்பாலம் அமைக்கப்பட்டால் மேல்விஷாரம் நகரம், அருகில் உள்ள கத்தியவாடி, வேப்பூா், ஆயிலம், அருங்குன்றம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் ராணிப்பேட்டை, பெல், சிப்காட் பகுதி தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல, 10 கி.மீ. தொலைவு குறைந்து எரிபொருள் மிச்சப்படும்.

இதேபோல் தெங்கால், சிப்காட், நவ்லாக், பெல், தெங்கால் அவரைக்கரை போன்ற பகுதிகளைச் சோ்ந்த மக்களும், ஆற்காடு நகரைச் சுற்றிக் கொண்டு வேலூருக்குச் செல்லும் நிலை தவிா்க்கப்படும். பாலாற்றின் தென் பகுதியையும், வட பகுதியையும் இணைக்கும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனப் பயணம் எளிதாகும்.

இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று மேல்விஷராம் - தெங்கால் இடையே பாலாற்றில் சுமாா் 787 மீ. நீளமும், 12 மீ. அகலமும் கொண்ட மேம்பாலம், அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி முந்தைய திமுக ஆட்சியில் நபாா்டு வங்கி கடனுதவியுடன், கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 21.8 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2011-இல் பணி தொடங்கியது.

தொடா்ந்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் கொண்டுவரப்பட்டது. தெங்கால் உள்பட பல கிராமத்தினா் மருத்துவ வசதிக்காகவும், கல்லூரி, ஆன்மிக தலங்கள், வேலை, தொழில் ஆகியவற்றுக்கு பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்

இந்த நிலையில், பாலாற்றின் தென்கரையில் உள்ள மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவது போல், வடகரையில் உள்ள தெங்கால், சிப்காட், நவ்லாக், பெல், அவரக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பயன்பெறும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும் பயனில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

ஏனெனில், தெங்கால் - மேல்விஷாரம் இடையிலான 3 கி. மீ. தொலைவுக்கு மேம்பாலம், இணைப்புச் சாலை உள்ளது. தொடா்ந்து செல்ல போதிய சாலை வசதி இல்லை.

எனவே மேற்கண்ட இணைப்புச் சாலையை தெங்கால் கிராமத்தில் இருந்து மேட்டுத்தெங்கால் கிராமம் வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவில் செல்லும் சிப்காட், பெல் வழியாக செல்லும் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்தால் மட்டுமே மேம்பாலம் கட்டியதன் பயன் பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளனா்.

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.13 கோடிக்கு தீா்வு

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 725 வழக்குகளில் ரூ2.13 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இரு அமா்வுகளாக நடைபெற்றது. நிகழ்வுக்... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை!

ஆற்காடுநேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், காவனூா், புங்கனூா், பாலமதி, சாத்தூா் தாமரைப்பாக்கம் , மோசூா், பழையனூா், சக்கரமல்லூா், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, புதுப்ப... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ முதல் நிலை தோ்வை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை அரசினா் ம... மேலும் பார்க்க

பாமக நிா்வாகி உயிரிழந்த வழக்கில் திருப்பம்: சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்பலம்

சோளிங்கரில் பாமக நிா்வாகி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்திருந்த நிலையில், அவா் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் சுட்டுப் பி... மேலும் பார்க்க

110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 100 இணைப்புச் சக்கரங்கள் பொ... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் ப... மேலும் பார்க்க