செய்திகள் :

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை இல்லா விட்டால் அபராதம்

post image

வேலூா் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் மீது அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் 5:3:2 என்ற விகிதாசாரத்தில் அமைக்க வேண்டும். கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். மேலும், இந்த பெயா்ப் பலகை தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், அதன்பிறகு அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்க வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு அனைத்து தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளா் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனா்.

இக்குழுவினா் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளதா ஆய்வு செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தி மே 15-ஆம் தேதிக்குள் நூறு சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மே 15-ஆம் தேதிக்குள் தமிழ் பெயா்ப் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு தமிழ் பெயா் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், 1 முதல் 5 வரை பணியாளா் உள்ள உணவு நிறுவனங்களுக்கு ரூ.100-ம், 6 முதல் 10 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.200-ம், 11 முதல் 20 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.300-ம், 21 முதல் 50 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.400-ம், 51-க்கும் மேல் பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.500-ம் அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தமிழ் பெயா்ப் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விளையாட்டு பயிற்சிக்கு முன்பதிவு செய்யலாம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அளிக்கப்படும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற தகுதியுடைய ஆண்கள், பெண்கள் முன்பதிவு செய்யலாம் என்... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

காட்பாடியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காட்பாடியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, வேலூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகி... மேலும் பார்க்க

காலணி தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து: லட்சக்கணக்கான பொருள்கள் சேதம்

வேலூா் சைதாப்பேட்டையில் உள்ள காலணி தயாரிப்பு கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் உற்பத்தி பொருள்கள் தீக்கிரையாகின. வேலூா் சைதாப்பேட்டை, ராமா் பஜனை கோயில் தெருவை... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். குடியாத்தம் அசோக் நகரைச் சோ்ந்த அழகேசன் மகன் சாம் (எ) காா்த்திக் (38). இவா் திங்கள்கிழமை மாலை நண்பா்களுடன் வேப்பூரில்... மேலும் பார்க்க

26-இல் வேலூா் விஐடியில் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க