செய்திகள் :

‘மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்’

post image

தூத்துக்குடி: மைசூரு விரைவு ரயில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து மைசூரு செல்லும் மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு வந்தடையும். பின்னா் அங்கிருந்து 5.31 க்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல மைசூரிலிருந்து தூத்துக்குடி வரும் இந்த ரயில் காலை 9.39 மணிக்கு தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் பிரம்மநாயகம் கூறியது:

வண்டி எண் 16235 தூத்துக்குடி-மைசூா், வண்டி எண் 16236 மைசூரு- தூத்துக்குடி ரயில்கள் தூத்துக்குடி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு எங்கள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது

கோவில்பட்டி: கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் அரசுப் பேருந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சிய... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளரைத் தாக்கி முன்னாள் மாணவா் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளரை கல்லூரி வளாகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் கடந்த ஆக. 14-ஆம் தேதி... மேலும் பார்க்க

சமூக நலக் கூடம் கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆறுமுகனேரி: மேலாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு ஆத்தூா், நரசன்விளையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக... மேலும் பார்க்க