செய்திகள் :

தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், மக்கள் குறைதீா் முதாமில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் அளித்த மனு:

தூத்துக்குடியில், கல்லூரி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலக பங்களா அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில், மீனவா்கள் மற்றும் அப்பகுதி மீனவ சமுதாய மக்களும், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் சுமாா் 3 நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனா்.

இந்த ஆலயத்துக்கு, அரசு பட்டா வழங்கி, பொதுப் பாதையை வகுத்து தர வேண்டும். தூத்துக்குடி குரூஸ்புரம் புனித சூசையப்பா் ஆலய பங்கின் மூலம் நடத்தப்படும் ஆலய வழிபாட்டுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது, மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனீஸ் பிரபு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான இரா.சுதாகா், முன்னாள் துணை மேயரும், தூத்துக்குடி கிழக்குப் பகுதிச் செயலருமான சேவியா் மற்றும் பாலஜெயம், சகாயராஜா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க