செய்திகள் :

மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?

post image

எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கும்பல்கள் பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பதுக்கி கேரளாவிற்கு கொண்டுச் செல்கின்றனர். மூன்று மாநிலங்களை இணைக்கும் சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வழித்தடத்தை கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

போதை பொருள்

இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள தொரப்பள்ளி வனசோதனைச் சாவடி அருகில் காவல்துறையினர் நேற்று மாலை சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்தில் பயணி ஒருவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் எம்.டி.எம்.ஏ போதை பொருள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். பயணி மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், மைசூரில் இருந்து கூடலூர் வழியாக குருவாயூர் செல்லும் அரசுப் பேருந்தில் இளைஞர் ஒருவர் போதைப்பொருளை பதுக்கி கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனையைத் தீவிரப்படுத்தினோம்.

கைதானவர்

அரசுப் பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது முகமது சபீரின் பைகளை ஆய்வு செய்தோம். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எம்.டி.எம்‌.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்துள்ள நிலையில், தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது ... மேலும் பார்க்க

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்; குழம்பிய போலீஸ்... படம் வரைந்து காட்டிக்கொடுத்த மகள்!

உத்தரப்பிரதேசத்தில், மனைவியைக் கணவன் கொலைசெய்து நாடகமாடிய சம்பவத்தில், மகளால் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, ஜான்சியில் கோட்வாலி பகு... மேலும் பார்க்க

Ragging: `அடித்து, முட்டி போட வைத்தனர்; எச்சி துப்பிய தண்ணீரை குடிக்க வைத்தனர்' -கேரள ராகிங் கொடுமை

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் செயல்பட்டுவரும் அரசு நர்ஸிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்ச... மேலும் பார்க்க

``சாராயமா, முன்பகையா'' -இரட்டை கொலை விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை! பின்னணி என்ன?

சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள்..மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் (28), ஹரிஷ் (25). இவர்களது நண்பர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி (20)... மேலும் பார்க்க

TNEB: `மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம்' -திருச்சியில் உதவியாளரோடு சிக்கிய உதவி செயற்பொறியாளர்

திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேட்மிட்டன் விளையாட்டு மைதானத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, மின்சார வாரிய உதவி செயற்பொ... மேலும் பார்க்க