செய்திகள் :

மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?

post image

எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கும்பல்கள் பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பதுக்கி கேரளாவிற்கு கொண்டுச் செல்கின்றனர். மூன்று மாநிலங்களை இணைக்கும் சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வழித்தடத்தை கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

போதை பொருள்

இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள தொரப்பள்ளி வனசோதனைச் சாவடி அருகில் காவல்துறையினர் நேற்று மாலை சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்தில் பயணி ஒருவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் எம்.டி.எம்.ஏ போதை பொருள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். பயணி மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், மைசூரில் இருந்து கூடலூர் வழியாக குருவாயூர் செல்லும் அரசுப் பேருந்தில் இளைஞர் ஒருவர் போதைப்பொருளை பதுக்கி கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனையைத் தீவிரப்படுத்தினோம்.

கைதானவர்

அரசுப் பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது முகமது சபீரின் பைகளை ஆய்வு செய்தோம். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எம்.டி.எம்‌.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்துள்ள நிலையில், தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம... மேலும் பார்க்க

சென்னை: நடுரோட்டில் சிதறிக் கிடந்த தோட்டாக்கள்; பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைப்பு..!

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அங்கு ஏ.கே.47 துப்பாக்கியின் உதிரிபாகம், 30 தோட்டாக்கள் கி... மேலும் பார்க்க

Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹங்க... மேலும் பார்க்க

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க