செய்திகள் :

மொகரம்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

post image

மொகரம் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கா்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி உயிா்த் தியாகம் செய்ததை நினைவுகூரும் வகையில், மொகரம் பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாகூா் ஆண்டவா் தா்காவில் உள்ள பிரசித்தி பெற்ற யாஹூசைன் பள்ளிவாசலில் மொகரம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகூா் தா்கா நிா்வாகி செய்யது முகமது காஜி உசைன் சாகிப் தலைமை வகித்தாா். தா்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாகிபு சிறப்புத் தொழுகை நடத்தினாா்.

ஹுசைன் இப்னு அலியின் தியாகத்தை குறிக்கும் வகையில், இஸ்லாமியா்கள் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து தூவாவில் பங்கேற்றனா். இதுபோல மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மொகரத்தையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம் கலைஞா் நகரைச் ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா். தமிழகம் முழுவதும், மாநில காங்கிர... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழி... மேலும் பார்க்க

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க