செய்திகள் :

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

post image

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணாா்மேடு முதல் விஐபி காா்டன் வரை ரூ. 7.95 லட்சம் கழிவுநீா் வடிகால் அமைத்தல், நன்செய் காளமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மன்னாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 3.45 மதிப்பில் பேவா் பிளாக் நடைபாதை அமைத்தல் என மொத்தம் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்த இரண்டு பணிகளும் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இப்பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இதில் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, லக்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் சாலைமாணிக்கம், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் எஸ்.எம்.செந்தில், மாவட்ட பொதுச் செயலாளா் பி. சிவசங்கா், முன்னாள் மாவட்ட தலைவா் எஸ்.ஏ. சிவசுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட அம்மா பேரவை தலைவா் நவீன் (எ) நவநீதகிருஷ்ணன், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளா் குலவிளக்கு கே.செல்வராஜ், ஒன்றிய அவைத்தவைா் சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க