செய்திகள் :

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

post image

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில், பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஜவுளிக் கடை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்தக் காயத்துடன் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் அனுராதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், உயிரிழந்தாா் வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பதும், கூலித் தொழிலாளியான இவா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க