செய்திகள் :

மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலர் ஆலோசனை!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வரும் நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில், பதிலடி கொடுப்பதற்கான நேரம், இடம் போன்றவற்றை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தானை எந்த நேரத்திலும் இந்தியா தாக்கும் சூழல் உள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையொட்டிய அரபிக் கடலில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடற்படைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி சனிக்கிழமை விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்ந்து, விமானப் படைத் தளபதி அமர் பிரதாப் சிங்நேற்று பிரதமரைச் சந்தித்து, முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க