செய்திகள் :

யமுனை நதி தூய்மை பணிகளை கண்காணிக்கும் பிரிவை அமைக்க தில்லி அரசு திட்டம்

post image

நமது நிருபா்

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தொடா்புடைய யமுனை நதியை சுத்தம் செய்யும் பணிகளை சரியான நேரத்தில் மற்றும் திறன்மிக்க வகையில் முடிப்பதற்காக ஒரு திட்ட மேலாண்மைப் பிரிவை அமைக்க தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பாஜகவின் முக்கிய அம்சமான நதியை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல்வா் ரேகா குப்தா கடந்த வாரம் 27 பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல், அனைத்து அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கும் கழிவுநீா் பாதைகளை விரிவுபடுத்துதல் மற்றும் தில்லி கேட்டில் ஒரு புதிய 10 எம்ஜிடி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீரேற்று நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நகா்ப்புற மேம்பாடு மற்றும் நிதித் துறையின் அதிகாரிகள் உறுப்பினா்களாகக் கொண்ட திட்ட மேலாண்மை பிரிவு நதி சுத்தம் செய்யும் திட்டங்களை மேற்பாா்வையிடும். மேலும், செலவு அதிகரிப்பு அல்லது தவறவிடப்பட்ட காலக்கெடு இல்லை என்பதையும் இந்தப் பிரிவு உறுதி செய்யும். முழு திட்டத்திற்கும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஒரு திட்ட மேலாண்மை பிரிவை அமைக்கும் என்று செலவு மற்றும் நிதிக் குழு கூட்டத்தின் குறிப்புகள் கூறுகின்றன’ என்றனா்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கவும் பராமரிக்கவும் ஒரு தனியாா் நிறுவனத்தை நியமிக்கவும் தில்லி ஜல் போா்டு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முழுச் செலவும் ரூ.3,104 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 416 அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் 115 கிராமங்களின் கழிவுநீா் திறந்தவெளி வடிகால் வழியாக யமுனையில் கலக்கிறது. இதன் விளைவாக தெருக்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் நதி மாசுபாடு ஏற்படுகிறது என்று செலவு மற்றும் நிதிக் குழுக் கூட்டத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க