செய்திகள் :

யானைகளுக்கு கரும்பு, பாகன்களுக்கு குடியிருப்பு! - முதல்வர் ஸ்டாலின் முதுமலை ட்ரிப் அப்டேட்ஸ்..

post image

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 127 - ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியை நாளை ( 15-05-2025) காலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்‌.

முதல்வர் ஸ்டாலின்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நேற்று மனைவியுடன் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.

தமிழ்நாடு வனத்துறைக்கு 32 ஜீப்களை வழங்கி கொடியசைத்த முதலமைச்சர், மாவூத் வில்லேஜ் என்ற பெயரில் தெப்பக்காடு பகுதியில் யானை பாகன்களுக்காக கட்டப்பட்டிருக்கும் பிரத்யேக குடியிருப்புகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்

பாகன்களுக்கான குடியிருப்பு குறித்து தெரிவித்த வனத்துறையினர், "5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44 குடியிருப்புகள் யானை பாகன்களுக்காக கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட இந்த குடியிருப்பினை முதலமைச்சர் திறந்து வைத்தார். பழங்குடி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் மேலும் விரிவு படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார் " என்றனர்.

சென்னை: தயார் நிலையில் 35 மின்சாரப் பேருந்துகள்; 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள் | Photo Album

BR Gavai: 40 ஆண்டுகால சட்டப் பணி.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பௌத்தர்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,B... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் நீலகிரி பயணம்: துர்கை வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் மனைவியுடன் 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் அரசு மற்றும் தனிப்... மேலும் பார்க்க

`பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வேலையாக இருக்கிறது!' - ஊட்டியில் கொதித்த ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் ப... மேலும் பார்க்க

தென்காசி: பணி அனுபவ சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுர... மேலும் பார்க்க

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

"சிந்து நதி ஒப்பந்தம்; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க