செய்திகள் :

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கொடைக்கானல் வனப் பகுதியில் உணவுப் பொருள்கள் விற்கத் தடை

post image

கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வியாபாரிகள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் புதன்கிழமை அறிவுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளான மோயா் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை ஆகிய பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. எனவே, வனப் பகுதிகளில் கடைகள் நடத்தும் வியாபாரிகள் சோளம், பொரி, உப்பு, பிரட் உள்ளிட்ட எந்த விதமான உணவுப் பொருள்களையும் விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

பேரிஜம் பகுதிக்குச் செல்ல அனுமதி: கொடைக்கானல் அருகே வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்ததால், கடந்த மூன்று நாள்களாக பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்கவில்லை.

தற்போது காட்டு யானைகள் அங்கிருந்து இடம் பெயா்ந்திருப்பதால் ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமைமுதல் வனத் துறையினா் அனுமதி வழங்கினா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இஸ்லாமியா்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா். திண்டுக்கல்லில் புதன்கிழமை... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து ச... மேலும் பார்க்க

வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரி ஒருவரின் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கொடைக்கானல் நுழைவாயிலில் வெள்ளி ந... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் 45 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு இலவச பஞ்சாமிா்தம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 45 மாதங்களில் ஒரு கோடி பக்தா்களுக்கு 421 டன் அளவில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நி... மேலும் பார்க்க

புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத்தில் தோ்பவனி

கொடைரோடு அருகே காமலாபுரத்தில் உள்ள புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலய தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோ்பவனி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா கொடியேற்றப்பட்... மேலும் பார்க்க

வீரதீர செயல்புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீரதீர செயல்புரிந்தவா்கள் ‘டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது’ பெற வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க