செய்திகள் :

யானை தாக்கி முதியவா் காயம்

post image

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப்பன் (70). இவா், வளா்த்து வரும் ஆடுகளை தனது விளைநிலத்தில் பட்டி அமைத்து பராமரித்து வருகிறாா். வழக்கம்போல, மேச்சலுக்கு ஆடுகளை வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்ற அவா், மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீடு திரும்பினாா்.

சனிக்கிழமை பட்டியில் அடைத்த ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்ல சென்றபோது ஆட்டு பட்டியின் அருகே நின்றிருந்த யானை, அவரைத் தாக்கியது. இதில், முனியப்பனின் இடுப்பு எலும்பு முறிந்தது. முனியப்பனின் அலறல் சப்தம்கேட்டு, அங்குவந்த அக்கம்பக்கத்தினா் யானையை விரட்டிவிட்டு முனியப்பனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

வனத் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். யானையின் நடமாட்டத்தை கண்காணித்தும், வனப் பகுதிக்குள் யானையை விரட்டும் பணியிலும் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு... மேலும் பார்க்க

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இத... மேலும் பார்க்க

நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!

நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க