செய்திகள் :

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு வாரத்துக்கு முன்னதாக பூக்களின் படிப்படியாக அதிகரிக்கும். அதேபோல பூக்களின் வரத்தும் கூடுதலாகவே இருக்கும். இந்த நிலையில், சனிக்கிழமை ஒசூா் மலா் சந்தையில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1200க்கும், குண்டுமல்லி ரூ. 1000க்கும், சாமந்தி ரூ.160 முதல் ரூ.200க்கும், ரோஸ் ரூ.120, 160க்கும் விற்பனையானது.

அதேபோல சம்பங்கி கிலோ ரூ.200க்கும், முல்லைப்பூ ரூ. 800க்கும், செண்டு பூ ரூ. 40 முதல் ரூ.50க்கும் அரளிரூ. 250க்கும் விற்கப்பட்டன. பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது. விநாயகா் பண்டிகையொட்டி பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இத... மேலும் பார்க்க

நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!

நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல... மேலும் பார்க்க

யானை தாக்கி முதியவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க