செய்திகள் :

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

post image

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆபரேடிவ் காலனி, ஓம் சக்தி மருத்துவமனை, இரண்டாவது தெருவில் இயங்கிவந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை கோ-ஆப்ரேடிவ் காலனி, நம்பா் 2, முதலாவது தெரு, ஏகேஆா் காம்ப்ளக்ஸ் என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முகவரியில் செயல்படும் வங்கி கிளையை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலத் தலைவா் மற்றும் பொது மேலாளா் சத்தியபான் பெகரா திறந்துவைத்தாா். மத்திய பட்டுத் துறையின் ஆராய்ச்சி விரிவாக்க மையத்தின் விஞ்ஞானி முத்தன்ன கல்லூா், பாதுகாப்பு பெட்டக அறையையும், மூத்த வாடிக்கையாளா் ராமகிருஷ்ணன் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையையும் திறந்துவைத்தனா். கிளைத் தலைவா் தனிஷ் அனைவரையும் வரவேற்றாா்.

பிராந்திய தலைவா் பி.எம்.செந்தில்குமாா் பேசியதாவது: வங்கியின் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும். வங்கியின் சேவைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதற்கு, வாடிக்கையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, வாடிக்கையாளா்கள் வங்கியின் சேவைகள் குறித்து பாராட்டினா். நித்திய கல்யாணி நன்றி தெரிவித்தாா்.

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இத... மேலும் பார்க்க

நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!

நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல... மேலும் பார்க்க

யானை தாக்கி முதியவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க