செய்திகள் :

யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!

post image

யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே.4 ஆம் தேதியன்று இஸ்ரேலின் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது முதல் முறையாக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தினர்.

இதில், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் அருகில் அந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி தரும் விதமாக, கடந்த மே.5 ஆம் தேதியன்று யேமனின் ஹுதைதா மாகாணத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, யேமனின் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தபோவதாகவும் அப்பகுதிவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் இஸ்ரேல் ராணுவம் இன்று (மே.6) எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே யேமனின் தலைநகர் சனாவின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்தத் தாக்குதலில் யேமனின் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில், விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதை ஹவுதி படைகளின் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான விடியோக்களில், சனா நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அப்பகுதி புகைகள் சூழ்ந்து காணப்பட்டது பதிவாகியுள்ளது.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய ... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழு... மேலும் பார்க்க

இலங்கை உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட தோ்தல் முடிவுகளில்அதிபா் அநுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. 339 உள்ள... மேலும் பார்க்க

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது... மேலும் பார்க்க