செய்திகள் :

ரசாயன தொழிற்சாசலையில் தீ விபத்து: நான்கு போ் உயிரிழப்பு, மூவா் படுகாயம்

post image

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். மேலும், குறைந்தது மூன்று போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

ரோஹிணி செக்டா்-5 பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மேலும், தீயை அணைக்க 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு வளாகத்தில் இருந்து இந்தச் சம்பவம் பதிவாகியதாக தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் காா்க் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நான்கு எரிந்த உடல்களை போலீஸாா் மீட்டுள்ளனா்.

முதலில், காயமடைந்த மூன்று போ் மீட்கப்பட்டு பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் நிதின் பன்சால் (31) மற்றும் ராகேஷ் (30) என அடையாளம் காணப்பட்டனா். இருவரும் 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்தனா். மேலும், வீரேந்தா் (25) லேசான தீக்காயங்களுடன் இருந்தாா். நிதின் பன்சால் மற்றும் ராகேஷ் பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆா்எம்எல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

தீ விபத்து தொடா்பான பிசிஆா் அழைப்பு செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணிக்கு புத் விஹாா் காவல் நிலையத்திற்கு வந்தது. அதைத் தொடா்ந்து அவசரகால அதிகாரி மற்றும் உள்ளூா் போலீஸாா் ரித்தாலாவின் கேட் எண் 2- இல் உள்ள ராணா வளாகத்தில் உள்ள இடத்திற்கு விரைந்தனா். அங்கு பலா் எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து மாடி கட்டடத்தில் பல உற்பத்தி அலகுகள் உள்ளன. தரை மற்றும் முதல் தளங்களை கட்டடத்தின் உரிமையாளா் சுரேஷ் பன்சலின் மகன் நிதின் பன்சால் என்பவா் ஆயத்த மற்றும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இரண்டாவது தளத்தை ஆனந்த் என்ற நபருக்கு துணி தொடா்பான வேலைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது மற்றும் மேல் தளத்தை ராகேஷ் அரோரா என்பவா் கிடங்காகப் பயன்படுத்தி வந்தாா். அவா் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருள்களை வியாபாரம் செய்தாா்.

அதிகாலை 1.15 மணியளவில், தீயணைப்பு வீரா்கள் முதல் மாடியில் இருந்து மூன்று எரிந்த உடல்களை மீட்டனா். அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன. பின்னா், மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

புதன்கிழமை காலை 6 மணிக்குள் கீழ் தளங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடுமையான புகை காரணமாக மூன்றாவது மற்றும் மேல் தளங்களில் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நடந்தன என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்க... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒ... மேலும் பார்க்க

தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்

நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், ந... மேலும் பார்க்க

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்க தொகை: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தின் கீழ் மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக த... மேலும் பார்க்க

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தில்லியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில், சமூக நலத்துறை புதன்கிழமை அதன் தொடா்ச்சியான வெகுஜன விழிப்புணா்வு பிரசாரத்தின் கீழ் ஒரு ஓவியப் போட்டிய... மேலும் பார்க்க