செய்திகள் :

ரசிகரை அடித்த பிரபல நடிகை!

post image

பிரபல நடிகையொருவர் ரசிகர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராகிணி திவேதி. அறிமுகமான ஆண்டில் சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து கவனம் ஈர்த்தவர் தமிழில் அறியான், நிமிர்ந்து நில், கிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அறியப்பட்ட நாயகியாகவே இருக்கிறார்.

இதையும் படிக்க: நடிகை அபிநயாவுக்கு விரைவில் திருமணம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு பெங்களூருவிலுள்ள ராகிணியின் இல்லத்தை சோதனை செய்தபோது அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிலிருந்ததும் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராகிணி 140 நாள்கள் வரை சிறையிலிருந்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகிணி திவேதியிடம் புகைப்படம் எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்தனர்.

ராகிணி திவேதி

அப்போது, எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் ராகிணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால், கோபமடைந்த ராகிணி அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!

இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப... மேலும் பார்க்க

செல்ஃபோனை 100% சார்ஜ் செய்யவே கூடாதா? செய்தால்?

மனிதர்கள் சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ.. எப்போதும் போனுக்கு சார்ஜ் போட்டு, அதற்கு கவர் போட்டு, மழையில் நனையாமல், கீழே விழுந்தால் பதறித் துடித்து அவ்வளவுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.முதலில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் விளையும் காளான், புற்றுநோய்க்கு மருந்தாகுமா? - புதிய கண்டுபிடிப்பு!

காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப்பொருள். எளிதாகவும் மலிவாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. காளானில் வைட்டமின் பி, டி, பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

கும்பகோணம் சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்!

மாசிமக பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று வைணவ தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருள ஏராளமான பெண்கள் உள்ப... மேலும் பார்க்க

இலங்கையில் துவங்கியது பராசக்தி படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்ப... மேலும் பார்க்க