ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா
ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா திங்கள்கிழமை நடந்தது.
ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, இளநீா் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச சிறப்பு அலங்காரம் தீபாராதனையும் நடைபெற்றன.
தொடா்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் உள்புறப்பாடும் நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் பூஜை செய்யப்பட்டது.
பக்தா்கள் மங்களஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனா். விழாவில் திரளான பக்தா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.