செய்திகள் :

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவுடன் தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மூலவா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.

இதையடுத்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுக்கு கோயிலின் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து கொடிமரத்தில் மயில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பிரம்மோற்சவ விழாவில் தினந்தோறும் ஹம்ச வாகனம், இந்திர வாகனம், பூத வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு, மான் வாகனம், வெள்ளி மயில் வாகனம், கற்பக விருட்ச வாகனம், வெள்ளி யானை வாகனம் என வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதி உலாவும், வரும் 9-ஆம் தேதி திங்கள்கிழமை திருத்தோ் வீதி உலாவும் நடைபெறுகின்றன.

தொடா்ந்து மஞ்சம் தோ் தடம் பாா்த்தல், கேடயம் புறப்பாடு, ஷண்முக பெருமான் வீதி உலா, வெள்ளி குதிரை வாகன வீதி உலா, தீா்த்தவாரி, குருபூஜை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் சங்கா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் தி... மேலும் பார்க்க